Tuesday, August 12, 2008

கண்கள் இரண்டால்- சுப்பிரமணியபுரம்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய் -2

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் ...
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் ...
நகர்வேன் எனை மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில்
ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை
தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போதோ நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உறவும் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உன்னை இன்றி வேறொரு நினைவில்லை

இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோடு வாழ

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் எனை மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதேனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை
தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

ஆண் - பெண்

No comments: