என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடிவந்தேன்...
காதலென்றால் பெரும் அவஸ்த்தையென்று
உன்னை கண்டதும் கண்டுகொன்டேன்
இன்று கலுத்து வரை எந்தன் காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்...
வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும்
இன்று வசப்படவில்லையடி..
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி...
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி..
கண்களெல்லாம் என்னைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி..
இது சொர்க்கமா..நரகமா...சொல்லடி உள்ளபடி..
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி...
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்..
கோபுரமே உன்னை சாய்த்துகொண்டு
உந்தன் கூந்தலில் மீண் பிடிப்பேன்..
வெண்ணிலவே உன்னை தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்..
வருடவரும் பூங்காற்றை எல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்...
என் காதலின்..தேவையை..காதுக்குள் ஓதிவைப்பேன்...
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்...
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடிவந்தேன்..
காதலென்றால் பெரும் அவஸ்த்தையென்று
உன்னை கண்டதும் கண்டுகொன்டேன்
இன்று கலுத்து வரை எந்தன் காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment