முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..- 2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உனை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என் உடல் சிலிர்க்கவைத்தாய்..-2
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே...உயிர் வாழுமே..
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேரெங்கு போனது பாரடி உன்னில்..
உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்...-2
என் ஸ்வாசக் காற்றில் எல்லாம்
உன் நியாபகம்.. உன் நியாபகம்
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை..-2
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா...
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment