வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- 2
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - 2
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
ஸ்வாசிக்க ஆசை இல்லை..-2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை..
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதும் இல்லை..
தள்ளித்தள்ளி நீ நடந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நந்தை உந்தன் கூந்தலுக்கு
நச்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நச்சத்திரம் வாடுதடி...- ௨
கண்ணி உன்னை பார்த்திருப்பேன்
கால் தடுக்க காத்திருப்பேன்..
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்..
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ..- ௨
விண்ணிலே பாதை இல்லை
விண்ணைத்தொட ஏனி இல்லை - ௨
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment